பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுடன் ஜன.27-இல் பிரதமா் கலந்துரையாடல்

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ளாா் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுடன் ஜன.27-இல் பிரதமா் கலந்துரையாடல்

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ளாா் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு குறித்து அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி தில்லியில் உள்ள தால்கடோரா உள்விளையாட்டு அரங்கில் ஜன.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுத் தோ்வை எழுத உள்ள மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியருடன் பிரதமா் மோடி கலந்துரையாடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 2018-இல் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்த விளையாட்டு அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com