அனுமதியின்றி இறைச்சி வியாபாரம் செய்ததாக உ.பி.யின் முன்னாள் அமைச்சர் யாகூப் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.,யில் பிஎஸ்பி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் யாகூப் குரேஷி. இவரை தில்லியின் சாந்தினி மஹால் பகுதியில் இருந்து உத்தர பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாகூப் குரேஷியுடன் அவரது மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இறைச்சி பேக்கேஜிங் மற்றும் பதப்படுத்துதல் போன்ற உரிமம் பெறாத வியாபாரத்தை நடத்தியதற்காக யாகூப் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர்களை கைது செய்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என மீரட் போலீசார் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.