ஆசிரியரை கத்தியால் குத்திய 12ம் வகுப்பு மாணவன்!

தில்லி அரசு பள்ளியில் நடைமுறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்று இருக்கையில் மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் பல முறை குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புதுதில்லி:  தில்லி அரசு பள்ளியில் நடைமுறைத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கையில் மாணவன் ஒருவன், ஆசிரியரை கத்தியால் பல முறை குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தில்லி இந்தர்புரி பகுதியில் நடந்தேறியுள்ளது.

நடைமுறைத் தேர்வை கண்காணிக்க பள்ளிக்கு வந்த ஆசிரியர் பூதேவை கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார் அந்த மாணவன். இதனால் ஆசிரியர் பூதேவ் நிலை குறைந்ததையடுத்து, காயமடைந்த ஆசிரியரை அருகில் உள்ள பிஎல்கே கபூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com