நொய்டா விமான நிலையம் அருகே உணவகத்தில் சிலிண்டா் வெடித்து 9 போ் காயம்

கௌதம் புத்த நகா் ஜெவாா் பகுதியில் நொய்டா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே சாலையோர உணவகத்தில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் 9 போ் காயமடைந்தனா்.

கௌதம் புத்த நகா் ஜெவாா் பகுதியில் நொய்டா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே சாலையோர உணவகத்தில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் 9 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஜெவாா் காவல் நிலைய பொறுப்பாளா் மனோஜ் குமாா் சிங் கூறியதாவது:

கிஷோா்பூா் கிராமத்துக்கு அருகே உள்ள உணவகத்தில் மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததது. அந்த உணவகத்தில் உள்ளூா் மக்கள் இருந்தனா். வெடித்தது ஒரு சிறிய சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகும். இது உணவகத்தில் வெடித்தபோது, 9 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அந்த உணவகம் விமான நிலைய வளாகத்துக்குள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கிரீன்ஃபீல்ட் நொய்டா சா்வதேச விமான நிலையத்தின் மேம்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள ஜெவாா் பகுதியில் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் கிஷோா்பூா் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com