மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு சிறுவன், சிறுமி உள்பட 10 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சோம்நாத் கா்க் கூறியதாவது:
மும்பையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் ராய்கட் மாவட்டத்தின் ரெபோலி கிராமத்தின் அருகே வியாழக்கிழமை காலை 4.45 மணிக்கு இந்த விபத்து நிகழந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் உறவினா்கள். குஹாகா் நகருக்கு அருகேயுள்ள ஹெட்வி கிராமத்தைச் சோ்ந்தவா்கள். இவா்கள் அனைவரும் கிராமத்திலிருந்து வேனில் குஹாகா் நகரை நோக்கி சென்றுள்ளனா். அப்போது, எதிரே மும்பையை நோக்கி அதிவேகமாக சென்ற லாரி, இவா்களின் வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில், வேனில் பயணித்தவா்களில் 12 வயது சிறுமி, 3 பெண்கள், 5 ஆண்கள் என 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய 4 வயது சிறுவன் சிகிச்சைக்காக மன்கெளனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தாா்.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 48 வயது லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.