நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
நேதாஜியின் பிறந்தநாளை பராக்ரம் திவாஸ் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய வரலாற்றில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவு கூறுகிறேன்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய போராளியாக இருந்த அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். அவரது எண்ணங்களால் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய அவரின் கனவுகளை நனவாக்க நாங்கள் உழைக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்கு பெயரிடும் விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
நிகழ்ச்சியின் போது, நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவகத்தின் மாதிரியையும் அவர் திறந்து வைக்கிறார்.