திருவனந்தபுரத்தில் ஜன.27-இல் அலுவல் மொழி மண்டல மாநாடு

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அலுவல் மொழி துறை சார்பில் அலுவல் மொழி மண்டல மாநாடு, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஜனவரி 27-இல் நடைபெறவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அலுவல் மொழி துறை சார்பில் அலுவல் மொழி மண்டல மாநாடு, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஜனவரி 27-இல் நடைபெறவுள்ளது.
 மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும் 4 மண்டல மாநாடுகள், அலுவல் மொழி துறை சார்பில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், திருவனந்தபுரத்தில் வரும் 27-ஆம் தேதி அலுவல் மொழி மண்டல மாநாடு நடைபெறவுள்ளது.
 மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தலைமை விருந்தினராக பங்கேற்கவிருப்பதாக, அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் மொழி ஊக்குவிப்பில் மிக சிறப்பாக செயல்பட்ட மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், இதர அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் மாநாட்டில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com