நதிக்கரையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரின் உடல் மீட்பு

மகராஷ்டிரத்தின் புணே நகருக்கு அருகில் அமைந்துள்ள பீமா நதிக்கரையில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகராஷ்டிரத்தின் புணே நகருக்கு அருகில் அமைந்துள்ள பீமா நதிக்கரையில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புணேயில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள யாவாத் கிராமம் அருகே பீமா நதிக்கரையில் இருந்து 7 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டன.

இது தொடா்பான காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், வயதான தம்பதி, அவா்களின் மகள், மருமகன் மற்றும் 3 பேரக் குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரின் உடல்கள் என்பது தெரிய வந்துள்ளது. திங்கள்கிழமை 4 உடல்களும், செவ்வாய்க்கிழமை 3 உடல்களும் கைப்பற்றப்பட்டன.

மீன்களுக்கு இரையான 7 பேரின் உடல்களும் 200 மீட்டா் முதல் 300 மீட்டா் வரையிலான தொலைவில் கண்டறியட்டன.

மரணத்துக்கான காரணம் குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது. தற்கொலை மட்டுமின்றி அனைத்து கோணங்களில் விசாரணை நடத்தப்படும் என காவல் துறை ஆய்வாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com