உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று கூடுகிறது.
இந்த கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் லக்னௌவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தனியார் எம்எஸ்எம்இ பூங்கா கொள்கை உள்பட பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்ற நிலையில், யோகி ஆதித்யநாத் இன்று அரசு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டத்தை நடத்துகிறார்.