நாடாளுமன்ற உணவகத்தில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விநியோகிக்கப்பட உள்ளன.
சிறுதானியங்களை பிரபலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று நிகழாண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. உலக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உணவகத்தில் சோயா பால், ராகி தோசை, ராகி ரவா இட்லி, கம்பு கிச்சிடி என சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விநியோகப்பட உள்ளது.
சிறுதானியங்கள் இந்தியாவின் பாரம்பரிய தானியங்கள் என்பதால், அவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.