பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்! 3 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் மரணமடைந்தனர்.
பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்! 3 பேர் படுகாயம்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கு ஒன்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் மரணமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் பந்திப்போரா மாவட்டம் உலர் வியூபாயிண்ட் அருகே இன்று(ஜன. 4) பிற்பகல் ராணுவ வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் 5 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்தனர்.

சிகிச்சை பெற்று வரும் 3 பேரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தற்போது ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பந்திப்போரா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மஸ்ரத் இஃபால் கூறினார்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்று ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com