வடகிழக்கிலிருந்து 22 துறவிகள் மகா கும்பமேளாவில் பங்கேற்பு!

தை அமாவாசையை முன்னிட்டு பிரயாக்ராஜில் குவியும் பக்தர்கள்..
மகா கும்பமேளா
மகா கும்பமேளாCenter-Center-Delhi
Published on
Updated on
1 min read

தை அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் வட கிழக்கிலிருந்து வரும் 22 துறவிகள் புனித நீராட உள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக வடகிழக்கு மக்களைக் கவரும் வகையில் ஒரு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது வடகிழக்கு பகுதியில் உள்ள பக்தர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், தை அமாவாசை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் அமிர்த ஸ்நானத்தில் பங்கேற்க வடகிழக்கின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த 22 துறவிகள் புனித நீராட உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் முதன்முறையாகப் பங்கேற்கிறார்கள்.

வடகிழக்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்களை பிரயாகராஜுக்கு ஈர்த்துள்ளது. மக்களிடையே பரவலான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற சித் மகாராஜ் மற்றும் பிரபு பீதாம்பர் தேவ் கோஸ்வாமி உள்பட வடகிழக்கைச் சேர்ந்த முக்கிய துறவிகளும் மகா கும்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தனித்துவமான முகாமில் பங்கேற்கின்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு இன்று 15 லட்சம் பேர் மகா கும்பத்தில் புனித நீராடியுள்ளனர். மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாளை புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com