யமுனையில் அமோனியா அதிகரிப்பதை விஷம் கலந்த குற்றச்சாட்டுடன் இணைக்க வேண்டாம்: தேர்தல் ஆணையம்

யமுனையில் அதிகரித்த அமோனியா விவகாரம் பற்றி..
EC
EC
Published on
Updated on
1 min read

யமுனையில் அதிகரித்த அமோனியா விவகாரத்தை, நதியில் விஷம் கலந்த குற்றச்சாட்டுடன் கலக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், விஷம் கலப்பதாகப் பொய் கருத்து தெரிவித்து தில்லி மற்றும் ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த அறிக்கைக்கு கேஜரிவால் புதன்கிழமை பதிலளித்தார். ஆனால் அவரது பதிலில் திருப்தி அடையாத தேர்தல் ஆணையம், யமுனை நதியில் விஷம் கலந்த வகை, அளவு, தன்மை மற்றும் கலந்த முறை பற்றிச் சரியான பதிலையும், உண்மை ஆதாரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

மேலும், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குள் தில்லி ஜல் வாரிய ஊழியர்கள்..அதாவது விஷத்தை கண்டறியும் பொறியாளர்களிடம் இடம் மற்றும் வழிமுறைக்கான விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவறினால் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் அதற்குண்டான முடிவை எடுக்கும் என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com