விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் கனடாவுக்குச் செல்ல இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரை இலங்கையிலிருந்து சிங்கப்பூர் அழைத்துச் சென்று அங்கிருக்கும் பிரபாகரனின் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், பின்னர் அங்கிருந்து கனடாவில் உள்ள பிரபாகரனின் சகோதரி வீட்டுக்கு அவர் செல்வார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.