இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்தது.
1 விக்கெட் இழப்புக்கு 216 ரன் என்ற நிலையில் மூன்றாவது நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, அலிஸ்டர் குக்கின் அபார ஆட்டத்தால் நல்ல ரன்னைப் பெற்றது. அவர் 190 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். டிராட் 87, பீட்டர்ஸன் 54, பெல் 5, படேல் 33 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பிரையர் 40 ரன்களுடனும் ஸ்வான் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 509 ரன்களைக் குவித்திருந்தது. இந்தியாவை விட முதல் இன்னிங்ஸில் 193 ரன் அதிகம் பெற்று, 4 விக்கெட் மீதம் உள்ள நிலையில் வலுவாக உள்ளது இங்கிலாந்து அணி.