கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்

சென்னை, ஜூலை 17: இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "5 ம
கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்
சென்னை, ஜூலை 17: இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒரு போதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுகவின் துரோகத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஈழத்தமிழர்கள் குறித்து பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் நன்மையாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com