ஒடிசாவில் தேடுதல் வேட்டை : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
By dn | Published On : 19th July 2013 11:07 AM | Last Updated : 19th July 2013 11:07 AM | அ+அ அ- |

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காவல்துறையினரும், சிறப்பு காவல் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை, ராயகடா மாவட்டத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை, வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன், பிகாரில், காவல்துறையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலை அடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.