ஜம்மு எல்லைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு
By dn | Published On : 19th July 2013 09:21 AM | Last Updated : 19th July 2013 09:21 AM | அ+அ அ- |

போராட்டக்காரர்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, ஜம்மு எல்லைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராம்பான் பகுதியில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. மேலும், பிரிவினைவாத கட்சிகள் மூன்று நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதனால், ஜம்மு எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.