தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில், அதிபரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.