தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததையடுத்து சீமாந்தரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.இந்நிலையில் தெலங்கானா தனிமாநில அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.