வீரகேரளம்புதூர் கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை
By | Published On : 22nd September 2013 08:26 PM | Last Updated : 22nd September 2013 08:26 PM | அ+அ அ- |

வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில். குருவாயூர் திருக்கோவிலில் உள்ள மூலவரைப் போன்ற தோற்றத்துடன் இத்திருக்கோவிலின் மூலவரும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கோவிலின் மேற்கே சுரண்டை - திருநெல்வேலி சாலையோரம் அமைந்துள்ளது. மிகவும் அழகான இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது. தெப்பக்குளத்தில் கல்சுவர் மற்றும் நீராழி மண்டபத்தில் மரங்கள் முளைத்து உள்ளது. தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால் தெப்பக்குள நீர் பாசி படிந்து உள்ளது.
எனவே, இந்த தெப்பக்குளத்தை சீரமைக்க ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.