பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முஸ்லீம் பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதாக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முஸ்லீம் பெண்ணை 12 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்
பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முஸ்லீம் பெண்ணை  பலாத்காரம் செய்த கொடூர கும்பல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதாக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முஸ்லீம் பெண்ணை 12 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 வயதான முஸ்லீம் பெண் ஒருவர் பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில்  சம்பவத்தன்று  தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது  உள்ளே புகுந்த 12 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் அவரது கணவரை அடித்து கட்டிப்போட்டதுடன், மகளை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர்  அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அப்பெண்  போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறீத்து விசாரித்துவரும் போலீஸார் இதற்கு பின்னணியில் உள்ளவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளனர். அரசியல் உள்நோக்கம் காரணமாக என்ற கேள்விக்கு, இப்போது உடனடியாக எதுவும் கூற முடியாது என்று போலீஸ் உயர் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com