நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நைஜிரிய அரசு முஸ்லீம் பயங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள நைஜீரிய அமைச்சர் டானிமு டுராகி கூறியுள்ளதாவது:- போகோ ஹராம் பயங்கரவாதிகள கடத்தி சென்ற சிறுமிகளை விடுவிக்க கைது செய்யப்பட்டுள்ள பங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை அரசு ஆராயந்து வருகிறது. என கூறியுள்ளார்.