சர்வதேச யோகா தின விழா: அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு 

ஜூன் 21- ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதாவ், மாயாவதி உட்பட
Updated on
1 min read

லக்னெள:  ஜூன் 21- ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதாவ், மாயாவதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை சபாநாயகர், மூத்த அரசு அதிகாரிகள் உடபட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்ப அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மாநில தலைநகரில் அமைந்துள்ள ராமபாயின் அம்பேத்கர் மைதானத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார். 55 ஆயிரம் யோகா ஆர்வலர்களும் இதில் பங்கேற்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com