இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் குல்பூஷண் ஜாதவ் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.