தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதியான கர்நாடக மாநில நந்திமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44 அடியில் தற்போது 42 புள்ளி 64 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,440 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரையோரங்களில் வசிக்கும் ஆழியாளம், பாத்தகோட்டா, தொரப்பள்ளி உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.