

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரு புள்ளி உயர்ந்து 31,663 புள்ளிகளாக இருந்தது.
அதேநேரத்தில் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 9,930 புள்ளிகளாக இருந்தன. ஐ.டி.சி, டாடா மோட்டார்ஸ் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 1.89%, 1.42% மற்றும் 1.23 சதவீதம் இழப்புக்களை சந்தித்தன.
இதற்கிடையில், எம் & எம் நிறுவனத்தின் பங்கு 1.72 சதவீதமும், சன் பார்மா பங்குகள் 1.28 சதவீதமும், டாக்டர் ரெட்டி லேப்ஸ் பங்கு 1.24 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.