சென்னை: டாக்டர் அம்பேத்கரின் 127- வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழ்புத்தாண்டு குறித்த ஆளுநர் கருத்து குறித்து கவலையில்லை என கூறினார்.
தொல்காப்பியர் கூற்றுப்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என திருவிடந்தை ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர், சமூகநீதிக்கு எதிராக மத்தியஅரசு செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.