ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்கு வெற்றி இலக்காக 201 ரன்களை கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற தில்லி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் லின் 31 (29), நரேன் 1 (4) சுமாரான துவக்கம் கொடுத்தனர்.
பின்னர் வந்த உத்தப்பா 19 பந்தில் 3 சிக்ஸர் 2 பவுண்டரி அடித்து 35 ரன்கள் விளாசினார்.
நிதிஷ் ராணா 35 பந்தில் 4 சிக்ஸர் 5 பவுண்டரி அடித்து அசத்தினார். கேப்டன் கார்த்திக் 19 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார். 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தில்லி அணி களமிறங்கவுள்ளது.