ஆப்கானிஸ்தானில் மேற்கு கோர் மாகாணம் பரோஸ் கோ என்ற இடத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 6 பொதுமக்களை குறி வைத்து சரமாரியாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அனைவரும் அங்குள்ள ஹசாரா என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஷியா பிரிவினர் ஆவார்கள் என இந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் இக்பால் நெஸ்மி தெரிவித்தார்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.