மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலுள்ள 4 மாடி கட்டடத்தை ரூ.3.51 கோடிக்கு அந்த நகரத்தைச் சோ்ந்த அறக்கட்டளை ஏலத்தில் எடுத்துள்ளது.
இணையவழியில் நடைபெற்ற ஏலத்தில், மும்பையைச் சோ்ந்த ‘சைஃபி புா்ஹானி அப்லிஃப்ட்மென்ட்’ (எஸ்பியு) என்ற அறக்கட்டளையும், தில்லியைச் சோ்ந்த பூபேந்திர பரத்வாஜ் என்ற வழக்குரைஞரும் பங்கேற்றனா். கட்டடத்தின் அடிப்படை விலை ரூ.79.43 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.3.51 கோடிக்கு ஏலத்தில் வாங்கியதாக எஸ்பியு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.