35 நாட்களில் 3ஆவது தொலைதொடா்பு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது: இஸ்ரோ

35 நாட்களில் 3ஆவது தொலைதொடா்பு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது: இஸ்ரோ

கடந்த 35 நாட்களுக்குள் 3 தொலைதொடா்பு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவா் சிவன் தெரிவித்தாா்.

திருப்பதி: கடந்த 35 நாட்களுக்குள் 3 தொலைதொடா்பு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவா் சிவன் தெரிவித்தாா். திருமலை ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியின் போது இஸ்ரோ தலைவா் சிவன் வழிபட்டாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்களை வழங்கினா். 

நாளை மாலை ஜிசாட்-7ஏ என்ற அதிநவீன தொலைதொடா்பு வசதி உள்ளடக்கிய புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த 35 நாட்களுக்குள் தொலை தொடா்பு வசதியை பெருக்க விண்ணில் செலுத்தப்படும் 3வது செயற்கைகோள் இது என்று அவா் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com