குழப்பத்தின் உச்சியில் டிடிவி தினகரன்: அமைச்சர் சி.வி.சண்முகம்

டிடிவி தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
குழப்பத்தின் உச்சியில் டிடிவி தினகரன்: அமைச்சர் சி.வி.சண்முகம்

டிடிவி தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறுகிறது.

ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் கணக்கெடுக்கப்பட்டு குற்றத்தின் தன்மையை பொறுத்து விடுதலை செய்ய உள்ளோம்.

அதிமுகவில் தினகரன் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. கட்சியின் சின்னம், பெயரை கோர டிடிவி தினகரனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. டிடிவி தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருப்பதால் அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com