தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை ஹெச்.ராஜா உருவாக்கி வருகிறார்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை ஹெச்.ராஜா உருவாக்கி வருகிறார் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 
தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை ஹெச்.ராஜா உருவாக்கி வருகிறார்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை ஹெச்.ராஜா உருவாக்கி வருகிறார் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -  சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது தவறானது. சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. 

தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை; ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக. ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை எச். ராஜா உருவாக்குகிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற நோக்கில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.  

மேலும் தமிழக அரசு ஜெயலலிதாவின் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை. அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர, அவசரமாக வைத்துள்ளனர். அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். அவர்கள் 6 மாதம் மனநல சிகிச்சைக்கு செல்வது நல்லது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com