கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்துடன் மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக ஏங்கவில்லை.
எஸ்.வி. சேகர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்கும். எஸ்.வி. சேகர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து போலீஸாருக்கு தகவல் அளிப்பது எனது வேலை அல்ல. கர்நாடாகவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும். 150 ஆண்டு பிரச்னை தீரும் என்று கூறினார்.