பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும் என்றும்
பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

சென்னை: தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும் என்றும் எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள். 

அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும். அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com