பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது: தம்பிதுரை பேட்டி

ஆளுநர் மளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர்
பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது: தம்பிதுரை பேட்டி

கரூர்: ஆளுநர் மளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். 

கரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் தேவைதான், அதற்காக அதை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் பத்திரிகை சுதந்திரம் தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது என்றவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுக்கிறது என தெரிவித்தார். 

மேலும், கடந்த 2014 -ஆம் ஆண்டு நாடுளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து வருகிறது. அதேபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்றார். 

அப்போது நீங்கள் தனித்து போட்டி என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், நான் என்றால் தம்பிதுரை இல்லை. அதிமுகவைதான் அப்படி அவர் சொல்லியுள்ளார். இதை சொன்னதற்கு அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நன்றி. 

கடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணனோ அவரது கட்சியோ ஆதரித்து வெற்றி பெறவில்லை. தனித்து நின்று தான் வெற்றி பெற்றோம் என தம்பிதுரை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com