நாமக்கல்: அரசு மதுபானக் கடைகளில் விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் சந்தித்துப் பேசலாம், ஆனால் மக்கள் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.
அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.