சேலம் அருகே மாமாங்கம் என்னுமிடத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் பேருந்துகளில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற பேருந்தும், பெங்களூருவில் இருந்து கேரளா சென்ற பேருந்தும் மோதியதில் இந்த விபத்து நடந்து உள்ளது.
சம்பவ இடத்தில் போலீஸார் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். விபத்து காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திரும்பி விடப்பட்டுள்ளன. விபத்தில் காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.