உத்தரபிரதேசம் மீரட், தில்லியில் நிலநடுக்கம்

உத்தரபிரதேசம் மீரட் பகுதி மற்றும் தில்லியில் இன்று காலை 6.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
உத்தரபிரதேசம் மீரட், தில்லியில் நிலநடுக்கம்

உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் இன்று காலை 6.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தில்லியிலும் உணரப்பட்டது. 

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை தலைநகர் தில்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com