விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஏழாயிரம் பண்ணை அருகே ஆண்டியாபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆண்டியாபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை திடீரென இடி, மின்னல் ஏற்பட்டுள்ளது. இதில், பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அறை முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
தொழிலாளர்கள் அனைவரும் பாதுப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.