சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்


சென்னை: சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் மினி வர்தா புயல் போன்று பல்வேறு பகுதிகளில் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 3 மணியளவில் திடீரென "மினி வர்தா புயல்" போன்று காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

சென்னை எழும்பூர், புரசைவாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

இதேபோன்று கோயம்பேடு, வளசரவாக்கம், வானகரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், கொளத்தூர், அமைந்தகரை, செங்குன்றம், பூவிருந்தவல்லி, ஆவடி, ஆம்பத்தூர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இப்போது பெய்து வரும் மழை 3 மணி நேரத்திற்கும் மேலாக இடைவெளி விட்டு இரவும் நீடிக்கும் என்றும் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு (செப். 19) வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com