சென்னை: அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தால் தென்மேற்குப் பருவகாற்றைக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கலில் ஒருசில இடங்கலில் லேசானசு முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புவியரசன் கூறினார்.