சென்னை மக்களுக்கு கவனத்திற்கு... ஆக 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிராக வரும் 21 ஆம்
சென்னை மக்களுக்கு கவனத்திற்கு... ஆக 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்


சென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிராக வரும் 21 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் இடங்களிலும், விவசாயக் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது. இதனால், பாதிக்கப்படுவதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும். கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மே 27  முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். 

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். 

இந்நிலையில், லாரிகளில் தண்ணீர் எடுக்க இடமில்லை என்பதாலும், தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழும்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சங்கத்தினர், பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வருந்தனர். லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவான நிலையில், தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என்றும், தண்ணீர் எடுக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி ஜூலை 8 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். 

தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படும் சூழ்நிலை உருவானது.
 
இதையடுத்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் ஜூலை 8 ஆம் தேதி நடக்கவிருந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கத்தினர் அறிவித்தனர். 

இந்நிலையில், வரும் 21-ஆம் தேதி முதல் மாநிலம் தமழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியது: நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி அளிக்க வேண்டும். இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி வாரியம் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 21-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்களின் போராட்ட அறிவிப்பால் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மாநகர மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அடுக்குமாடி வளாகங்கள், ஐடி பூங்காக்கள், விடுதிகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மோசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com