திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 17 பேருடன் சென்ற மினி வேன் டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப் பட்டுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கோயில் திருவிழாவிற்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.