புதுதில்லி: பிகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா(85) உடல்நலக் குறைவால் இன்று தில்லியில் காலமானார்.
பிகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலமானார்.
பிகார் மாநில முதல்வராக ஜெகநாத் மிஸ்ரா மூன்று முறை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகநாத் மிஸ்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதீஷ் குமார், மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.