மகாராஷ்டிராவில் கண்டெய்னர் லாரி - பேருந்து மோதி விபத்து: 11 பேர் பலி

மகாராஷ்டிரா துலே அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் 11 சம்பவ இடத்திலே
மகாராஷ்டிராவில் கண்டெய்னர் லாரி - பேருந்து மோதி விபத்து: 11 பேர் பலி


மும்பை: மகாராஷ்டிரா துலே அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் 11 சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டம் நிம்குல் கிராமம் அருகே நேற்று நள்ளிரவு ஷஹடா-தொண்டைச்சா சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது எதிர்திசையில் வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 
 
காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com