உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள்.
"மிகச்சிறந்த திறமை வாய்ந்த பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என தெரிவித்துள்ளார்.