சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள தனியார் நிறுவன அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது.