மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது

மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேரின் உடல்கள் ஒரே இடத்தில்
உயிரிழந்தவா்களின் சடலங்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சித் தலைவா் நாகைத் திருவள்ளுவனைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீஸாா்.
உயிரிழந்தவா்களின் சடலங்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சித் தலைவா் நாகைத் திருவள்ளுவனைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீஸாா்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 

சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. பின்னர் அவர்களது சடலங்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கு ஒரே நேரத்தில் 17 சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய வசதிகள் இல்லை எனக் கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து மருத்துவமனை முன்பு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 

 இந்நிலையில், போராட்டம் நடத்தியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், இன்று 25 பேரை கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com